நேற்று எதேச்சையாக லிபர்டி திரையரங்கம் உள்ள சாலையில் நடந்து சென்றபொது, அவ்விடம் கீற்றுக்கொட்டகை கொண்டு மூடப்பட்டிருப்பதையும், வாசல் கதவுகள் பெயர்ந்திருப்பதைப் பார்த்ததும், சற்றே துணுக்குற்றவனாய் உள்ளே நோக்குகையில் திரையரங்கம் மூடப்பட்டது தெரிய வந்தது. அதன் சேர்கள் அனைத்தும் வெளியே கடாசப்பட்டிருந்தன. அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது அவர்களும் வருத்தப்பட்டவாறு திரையரங்கம் மூடப்பட்டதைச் சொன்னார்கள்.
கோடம்பாக்கத்தில் பேச்சிலர் வாழ்க்கை வாழ்ந்த போது, அடுத்த வீதியில் அமைந்திருந்த இத்திரையரங்கம் அவ்வப்போது எங்களுக்கு பொழுது போக்கு மையமாக உதவியிருக்கிறது. சும்மா வாங்க ஒரு டீ சாப்பிட்டு வரலாம் அப்டிங்கிற மாதிரி வாங்க ஒரு படம் பாத்திட்டு வந்திடலாம்னு கிளம்புவோம். 20 ரூபாய்க்கு பால்கனி டிக்கட்! ஹாயாக கதவைத் திறந்து வைத்துக்கொண்டு படம் பார்க்கவும், போரடித்தால் எழுந்து காரிடார் வந்து கதையளக்கவும் …. எங்களது பேச்சிலர் வாழ்வின் இனிய தருணங்கள். வெள்ளிக்கிழமை தோறும் மாற்றப்படும் திரைப்படங்கள் – பெரும்பாலும் 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட திரைப்படங்களை வெளியிடுவதோடு பகல் காட்சிகளில் பழைய படங்கள் வெளியிடுவார்கள்.
சென்னையில் பழைய திரையரங்குகளில் ஒன்றாகத் திகழ்ந்தது இன்று அதன் சேவையை முடித்துக்கொண்டுவிட்டது. மல்ட்டி பிளக்ஸ்களின் வருகைகள் இதற்கு காரணம் என்று ஒரு புறம் சொன்னாலும், இத்தகு தியேட்டர்கள் அடித்தட்டு மட்டும் நடுத்தர வகுப்பு மக்களுக்கே உபயோகமாக இருந்து வந்தன. தற்போது பொழுதுபோக்குக்கான தேவைகள் இல்லாமலில்லை. ஆனால் தொலைக்காட்சி வசம் வந்துவிடுகிறார்கள். காலை பரபரப்பு கிளம்புவது – பணி செய்வது – மாலை டிவி பார்ப்பது என்பது நம் ஜனநாயகக் கடமை அல்லவா. பொழுது போக்கு என்பது மனதை உற்சாகப் படுத்த.. ஆனால் தொலைக்காட்சி பார்த்தால் மண்டை கிறுகிறுக்கிறது. ‘ரெஸ்டு எடுத்து ரெஸ்டு எடுத்து டயர்டா ஆயிட்டியா’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் விசாரிப்பார்.. அந்த நிலை ஆகிவிடுகிறது. ஓவர் டோஸ்! என்றாலும் பலரும் அவர்கள் மனதை தொலைக்காட்சிக்கு கொள்ளை கொடுத்துவிட்டார்கள். பின்னே இவர்கள் எங்கே போவார்கள்.
பேச்சிலர் காலத்தில் இத்திரையரங்கு போவது மகிழ்வாக இருந்தது. திருமணம் முடித்து சில மல்டிப்ளக்சுகள் போனால் .. நூற்றுக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. பெற்றோர் குழந்தைகள் என்று கூட்டிப் போனால் சில ஆயிரங்கள் வந்துவிடும் செலவும் இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது.
ம்ம்ம்ம்.. அதே லிபர்டி பெயரில் வணிக வளாகம் அமையப் போவதாகச் சொல்கிறார்கள். நல்லது நடக்கட்டும்.
லிபர்டி பை பை!
oruthalai ragam anke 100naal odiyathu…thinamum libertyyai kadnthuthan bus pitikka vendiyirukkum.chennail enathu muthl pukalidam anguthan director g.v,iyer veedilthan vaasam.
By: durai on October 15, 2010
at 6:07 pm
நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி திரு. துரை அவர்களே. காலைக்காட்சிக்கு ஒட்டியிருந்த சிகப்பு ரோஜாக்கள் சுவரொட்டி என்னவோ நினைவில் வந்து போகிறது.
By: Pandian on October 15, 2010
at 6:12 pm
sad to here
By: ramji_yahoo on October 16, 2010
at 11:49 am